Tuesday, 31 March 2015

மேற்கோள்கள்

சிமிழ் பதிவுகளுக்காக நான் ஆராய்ச்சி செய்த மேற்கோள்கள் 

  • http://senkettru.blogspot.sg/2013/10/10-singapores-10-basta-tankare-i.html 
  • http://www.vikatan.com/news/article.php?module=news&aid=40030 
  • heb.gov.sg/ 
  • http://thinmaithtamil.blogspot.sg/2014/05/3_2418.html 
  • Tamilkalanjiyam.com 
  • Nlb.gov.sg 
  • http://mozhi1903.blogspot.sg/2011/04/mind-map.html 
  • www.youtube.com 
  • www.google.com/ images 
  • http://mvathani.blogspot.sg/ 
  • http://ta.wikipedia.org/wiki/ 
  • http://mullairani.blogspot.sg/






தேடல் தொடர்பான தகவல்கள் மற்றும் வார்த்தைகள் 

சிங்கப்பூரில் தமிழர், தமிழர் வாழும் நாடுகள் - சிங்கப்பூர், சிங்கப்பூரில், தமிழர்கள், முதலிய, இரண்டாம், சிங்கப்பூரின், இந்தியர்கள், மக்கள், மாணவர்கள், கொண்டு, தொடங்கியது, இந்திய, žனர்கள், வேண்டும், இவர்கள், ஆகையால், தமிழர்களும், மலேயர்கள், மாரியம்மன், வரலாறு, உயர்நிலைப், சிங்கப்பூருக்கு, தொடர்பு, ஆங்கில, கோயில், பள்ளிகளில், என்றும், தமிழர்களின், பொதுவாக, மேலும், தமிழர், விழுக்காடும், ஆண்டளவில், மூன்று, நிகழ்ச்சிகள், வளர்ச்சியில், குடியரசுத், தொடங்கினர், வந்தனர், இவ்வாறு, தமிழ்மொழி, நீரிணைக், பேசுவோர், பெரும்பான்மையான, ஆங்கிலம், ஏற்றுமதி, கிடையாது, கூறலாம், ஆண்டுகளில், ஆங்கிலேயர்கள், சுதந்திர, தமிழ்ப், அளிக்கப்பட்டது, எண்ணிக்கை, பின்னர், தமிழிலும், இத்தீவின், முக்கியக், வருகிறது, இருக்கின்றார்கள், தமிழ்க், தலைவர், இருந்தார்கள், அலுவலக, ராஃபில்ஸ், மலேசியா, இனத்தினரும், இருந்தது, வாணிபம், பெரும்பான்மையோர், இறக்குமதி, வணிகர்கள், சிறப்பான, சென்று, ஓங்கியிருந்தது, இருந்தனர், திருமணம், குடியேற்ற, வண்ணப்பட, சேர்ந்த, சிங்கப்பூர்த், குடியேற்றங்கள், சிங்கப்பூரை, மொழியாகக், நிலையங்கள், தமிழைத், படங்களும், பங்கினர், ஒளியூடுருவிப், மாணவர்களின், தாய்மொழியாகக், மொழிகள், தமிழில், இந்தியன், சுமார், செயல்பட்டு, வில்லைகளும், உமறுப்புலவர், 100க்கு, பண்பாட்டு, அமைச்சர், பயிலும், காண்பிக்கப்படுகின்றன, ஆட்சியின்போது, மாறியது, ஆவார்கள், žனர்களும், தமிழர்களில், சிங்கப்பூருக்குக், துறையிலும், பணியிலும், ஆண்டில், மற்றொரு, முக்கியத்துவம், தமிழ்நாடு, கூறுகின்றார், அல்லது, பிறந்த, அவனுடைய, இரப்பர், நிர்வாக, தீபாவளி, பங்கேற்றனர், இருக்கின்றன, விழுக்காடு, செய்யும், வருகின்றன, குறிப்பாக, திங்களில், செய்துகொண்ட, ஒப்பந்தங்கள், குடியேற்றம், செல்வாக்கு, காலத்தில், தொடக்க, நகரத்தார், மசூதி, கட்டுமானம்,

சிமிழுக்கு நன்றி






அக்கரைச் சீமை அழகினிலே 
மனம் ஆட கண்டேனே
புதுமையிலே மயங்குகிறேன்
புதுமையிலே மயங்குகிறேன்
அக்கரைச் சீமை அழகினிலே 
மனம் ஆட கண்டேனே

பார்க்க பார்க்க ஆனந்தம்
பறவைப் போல உல்லாசம்
வேலையின்றி யாரும் இல்லை
எங்கும் சந்தோஷம்
வெறும் பேச்சு வெட்டி கூட்டம்
ஏதும் இல்லை இந்த ஊரில்
கள்ளம் கபடம் வஞ்சகம் இன்றி
கண்ணியமாக ஒற்றுமை உணர்வுடன்
வாழும் சிங்கப்பூர்

அக்கரைச் சீமை அழகினிலே 
மனம் ஆடக் கண்டேனே
புதுமையிலே மயங்குகிறேன்

சிட்டுப் போல பிள்ளைகள்
தேனில் ஆடும் முல்லைகள்
துள்ளி துள்ளி மான்கள் போல
ஆடும் உற்சாகம்
தினம் தோறும் திருநாளே
சுகம் கோடி மனம் போல
சீனர் தமிழர் மலாய மக்கள்
உறவினர் போல அன்புடன் நட்புடன்
வாழும் சிங்கப்பூர்

அக்கரைச் சீமை அழகினிலே 
மனம் ஆடக் கண்டேனே

மஞ்சள் மேனி பாவைகள்
தங்கம் மின்னும் அங்கங்கள்
காவியத்தில் வார்த்தை இல்லை உன்னைப் பாராட்ட
நடை பார்த்து மயில் ஆடும்
மொழி கேட்டு கிளி பேசும்
கண்ணில் தவழும் புன்னகைக் கண்டேன்
சொர்க்கம் போல இன்பமும் பெருமையும்
வாழும் சிங்கப்பூர்

அக்கரைச் சீமை அழகினிலே 
மனம் ஆடக் கண்டேனே
புதுமையிலே மயங்குகிறேன்




இதுவரை சிமிழை பொறுமையாக படித்தவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. இன்னும் நிறைய பதிவுகள் செய்ய எனக்கு ஆசை தான். ஆனால் நேரம் பற்றாக்குறை,  என்னுடைய  தட்டச்சு ஆற்றல், பள்ளி வேலைகள், தேர்வுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டமையால் பத்து பதிவுகளுக்கு மேல் என்னால் செய்யமுடியவில்லை. ஆனால் இந்த சிமிழை நான்  ஒருபோதும் மூடியே வைத்திருக்க மாட்டேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிங்கையை பற்றிய  அறிய தகவல்கள், முக்கியமான பதிவுகள் என்று  பதிந்து கொண்டே இருப்பேன். 

இந்த வலைப்பூவை செய்ய வழிகாட்டிய என்னுடைய பெற்றோர்களுக்கு என் முதல் நன்றி. வலைப்பூ  என்றல் என்ன, அதில் எப்படி பதிவு செய்ய வேண்டும் என்று எனக்கு  விளக்கி, பயிற்சி கொடுத்த என்னுடைய பள்ளி தமிழ் ஆசிரியருக்கும், உயர் தமிழ் பாடம் படித்து வரும் உமறு புலவர் தமிழ் பள்ளி ஆசிரியர்களுக்கும் என்னுடைய  மனமார்ந்த நன்றி.


சிமிழுக்கான பதிவுகளை நான் சேகரிக்க பயன்படுத்திய வலைபூக்களுக்கும், செய்தி தொகுப்புகளுக்கும்,  பயன்படுத்திய  படங்களுக்கும், நான் மிகவும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். சிறு பிழைகளோ, தவறுகளோ இருந்தால் என்னை மன்னித்து அந்த பகுதிகளை மேலும் திருத்தமாக செய்ய எனக்கு நீங்கள் அறிவுரை செய்யுங்கள். 

சிங்கப்பூர்  50 ஆண்டுகளின் நிறைவை மகிழ்ச்சியோடும், பெருமையோடும் கொண்டாடும் இந்த சிங்கை 50 ஆண்டில் இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை ஏற்படுத்திய இணைய மாநாட்டுக்கும் என்னை போன்று பதிவுகள் செய்த மாணவர்கள் சார்பில் என்னுடைய நன்றியை தெரிவித்து  தற்காலிகமாக விடைபெறுகிறேன் !


நன்றி! வணக்கம்!


தமிழர்களுக்கு தோள் கொடுத்த தேசத் தந்தை




முல்லைக்கு தேர் கொடுத்தவர் பாரி வள்ளல் !
சிங்கைக்கு தோள் கொடுத்தவர் திரு லீ குவான் யூ !





சிங்கப்பூரில் இன்று தமிழர்களின் எண்ணிக்கை  அதிகரித்ததற்கு பெருமளவில் உறுதுணையாய் இருந்தவர் சிங்கப்பூரின் தந்தை திரு லீ குவான் யூ அவர்கள். தமிழர்களை  ஆதரித்து அவர்கள் இங்கு குடியேற குடிஉரிமை வழங்கி ஆதரித்தவர். பல வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தமிழர்களின் நிலையை உயர்த்தியவர். அரசாங்கத்திலும்  உயர்ந்த பதவிகளை திறமை வாய்ந்த தமிழர்களுக்கு வழங்கியவர். சிங்கப்பூர்  அமைய காரணமாக இருந்த தமிழர்களின் தியாகங்களை போற்றி தமிழர்களுக்கு தமிழை ஆட்சி மொழியாக சிங்கையில் அறிவித்த பெருமை அவரையே சாரும். 

உலக நாடுகளுக்கே முன்மாதி தலைவனாக விளங்கிய திரு லீ குவன் யூ உடலளவில் நம்மை விட்டு பிரிந்தாலும், மனதளவில் என்றும் நீங்க இடத்தில் இருப்பார். திரு லீயின் உணர்ச்சி மிக்க உரையாடல்கள், பேட்டிகள் வருங்கால சமுதாயத்திற்கு அவர் விட்டுச்  சென்ற  புதையல் ஆகும். இவரை முன்மாதிரியாக பல மாணவர்கள் கொண்டுள்ளனர். 


திரு லீயின் புகழாரம் இந்தியாவில் பல கிராம மக்களுக்கு தெரிந்திருப்பது ஆச்சர்யமான விஷயம் அல்ல. வேலை தேடி வந்த இந்தியர்களுக்கு வெறுங்கையை அவர் என்றுமே காட்டியதில்லை . தமிழகத்தில் உள்ள பல ஏழை குடும்பங்களின் வறுமை நிலையை அகற்ற அவர்கள் வீட்டில் இருந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி வறுமை நிலையை போக்கியவர். . 



ஆசியாவின் இருண்ட மூலையில் இருக்கும் பாவப்பட்ட சந்தை  என்று அழைக்கப்பட்ட சிங்கப்பூரை உலகம்  வியக்கும் அளவுக்கு போட்டி நாடாகவும், பொருளாதாரத்தில் மிகவும் வளர்ச்சி அடைந்த நாடாகவும், மற்ற நாடுகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும், வர்த்தக மையமாகவும் மாற்றிய பெரும் சக்தி திரு லீ குவான்  யூ அவர்கள். சிங்கப்பூர் எதுவும் எல்லை என்ற பெயரிலிருந்து எல்லாமே இங்கு சாத்தியம் என்று மாற்றிய என்றுமே அழியா சிகரம் திரு லீ அனைவரின் நெஞ்சத்திலும் வாழ்வாங்கு வாழுவார்.


திரு லீக்கு நான் செலுத்தும் ஒரு ஆங்கில அஞ்சலி 


A tribute to Mr Lee Kuan Yew


You are a Legend, a living Legend

A man of words, wisdom and wits

You were born to give a name to the red dot

Who changed a fishing village to a First World Nation

Making it our HOME

A great man with a great vision

who saw tomorrow with hopes

Restless nights you spent thinking about the nation

You shed your blood and spent your youth for the future generation

You are a Legend a living legend


You were a man of words

Who learned to say NO

Your words were never fake

As you spoke the hard truths

Proverb says “To gain something you have to lose something”

What did you gain – a secured Nation

What did you lose – Your Life

What did we gain – secular state

What did we lose – a strong FORCE

You are a Legend, A living Legend


You left us valuable lessons, touching moments and bold speeches

Which we will treasure for our future generations

You are the founding father of Singapore

a chanakya in Politics

You will always live in our heart

We salute you

Mr Lee Kuan Yew

பக்தி ஸ்பெஷல் - சிங்கப்பூரில் தமிழ் கோயில்கள்


சிங்கையில் கோயில்களுக்கு பஞ்சம் இல்லை. பொதுவாகவே ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு  இந்து கோயில், இஸ்லாமிய மசூதி மற்றும்  கிறிஸ்தவர்களின் தேவாலயம் காணப்படும். சீக்கியர்களின் ககுருத்வாராவும் ஒரு சில்ல வட்டாரங்களில் இருக்கும். 


சிங்கப்பூரின் முதல் இந்துக் கோயிலான மாரியம்மன் கோயிலில் ஒரு தமிழ்க் கல்வெட்டு உள்ளது.  தமிழகத்திலுள்ள கடலூரைச் சார்ந்த சேஷாசலம் பிள்ளை என்பவர் இக்கோயிலிலுள்ள இராமர் திருவடிக்கு 1828 இல் கொடுத்த நன்கொடை பற்றிய குறிப்பு ஒன்று இக்கல்வெட்டில் உள்ளது. இதுவே இங்குள்ள முதல் தமிழ்க் கல்வெட்டாகும்.








முருகன் கோவிலை, சிங்கப்பூர் அரசு  தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்துள்ளது. சிங்கப்பூருக்கு வியாபாரத்திற்க்காக சென்ற தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுகோட்டை செட்டியார்களால் , 1859ல் தண்டாயுதபாணி கோவிலை கட்டப்பட்டது.

சிங்கப்பூர் தேசிய பாரம்பரிய நினைவுச் சின்ன வாரியம், இந்த கோவிலை, சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, இரண்டு இந்து கோவில்கள், சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. சிங்கையின்  தேசிய நினைவுச் சின்னங்களின் பட்டியலில், தண்டாயுதபாணி கோவில், 67வது இடத்தில் உள்ளது பெருமைக்குரிய விஷயமாகும்.



பல இன மக்களிடையே இந்துக்களும் சீனர்களும் ஒன்றாக இணைந்து ஒரே இடத்தில்வழிபடுவது சிங்கப்பூரர்களின் சமய நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் காட்டுகிறது..தூய்மையான பராமரிப்பு, அமைதியான சூழ்நிலை,கனிவான வரவேற்பு சிங்கை கோவில்களின் சிறப்பு அம்சங்களாகும்.





தமிழகத்திலிருந்து வியாபாரத்திற்காக மலாயா வந்த தமிழ் முஸ்லிம்களின் வருகை பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கிவிட்டது. இக்காலகட்டத்தில் தமிழகத்தில் நெசவு தொழில்கள் நலிவுற்றதாலும் , வேறு தொழில்கள் மற்றும் வணிக வாய்ப்புக்கள் அதிகமாக இல்லாததாலும் பிழைப்புதேடி இங்கு வந்தோரின்  எண்ணிக்கை பெருகியது. சுலியா மசூதி என்று அழைக்கப்படும் ஜம்மா மசூதி தமிழகத்தின் நாகூர் தர்காவிற்கு நிகராக உள்ள வழிபாட்டு தளமாகும்.

சிங்கப்பூரில் தமிழ் பண்டிகைகள்

பாரம்பரியத்தை பறைசாற்றும்  பொங்கல் பண்டிகை 

விவசாயிகள், இயற்கை சக்திகளான சூரியன், மழை, பனி  மற்றும் கடவுளுக்கும் நன்றி சொல்லும் பண்டிகையான பொங்கல் இந்தியாவில் கொண்டாடுவதைப்  போல சிங்கையில்  மிகவும் சிறப்பாகவும் பாரம்பரிய வழியிலும் கொண்டாடப்படுகிறது. 





 



திறந்த வெளி அரங்கங்களில் பந்தல் போடப்பட்டு மயிலாட்டம், கரகாட்டம்,  சிலம்பம், சடுகுடு, கபடி போன்ற கிராமிய விளையாட்டுகள் நடைபெறுகின்றன. பின்னர், பெரிய பானையில் சமத்துவமாக அதாவது இந்தியர்கள், மலாய் காரர்கள், சீனர்கள் ஒன்றாகக் கூடி பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு பொங்கலை வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்கள். பொங்கல் பண்டிகையின் போது குட்டி இந்தியாவில் உள்ள சில முக்கியமான தெருக்களில் வண்ண வண்ண பானைகளால் அலங்காரம் செய்கிறார்கள். மாடுப்பபண்ணையிலிருந்து மாடுகள் வரவழைக்கப்பட்டு மாட்டு பொங்கல் சிற்பக கொண்டாடப்படுகிறது.

தினம் தினம் தினம் தீபாவளி - சிங்கையில் தீபத் திருநாள் 

சிங்கையில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனிழ் பண்டிகையான தீபாவளி அன்று பொது விடுமுறை ஆகும். தீபத் திருநாளை கொண்டாடும் வகையில் செரங்கூன் சாலை முழுவதும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருக்கும்.  இங்கு வெடிகள் வைக்க தடையானதால்,  கம்பி மத்தாப்புகள் வகை பட்டாசுகள் விற்கப்படும். 



தீபாவளி கிராமம் அமைக்கப்பட்டு ஒளியூட்டு விழ நடைபெறும். செரங்கூன் சாலை ஒளியூட்டு விழாவை தொடங்கிவைக்க சிறப்பு விருந்தினராக அந்த  வட்டார அமைச்சர் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்படுவர்.
தீபாவளி சந்தை, பலகார கடைகள், அணிவகுப்புகள், கண்காட்சிகள் என்று குட்டி இந்திய களை கட்டிக் கொள்ளும். கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். 


முருகனுக்கு அரோகரா- சிங்கையில் தைபூசம்  





தெய்வீகம் தோற்றுப்போகும் அளவுக்கு தமிழகத்தில் கொண்டாடப்படும் தைப்பூசத்தை போல ஏன் அடையும் விட மிகச் சிறப்பாக சிங்கையில் தைபூசம் கொண்டாட்டப்படுகிறது. அலகு காவடி, பால் காவடி என்று பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை மிகவும் பக்தியோடு முருகனுக்கு செலுத்துகின்றனர். தமிழர்களைக் காட்டிலும் சீனர்களும் போட்டி போட்டுக்கொண்டு காவடி எடுக்கின்றனர். ஆட்டம், பாதடம் என்று தைபூசம் களை  கட்டிக் கொண்டு நடைபெறும். கோயிலுக்குச் செல்லும் வழி எல்லாம் தண்ணீர், மோர் பந்தல்கள்  அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு தண்ணீரும் மோரும் வழங்கபடுகிறது. தைபூசதன்று சிறப்பு காவலர்கள் மற்றும் தொண்டூழியர்கள் கூட்டத்தை கட்டுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பார்கள். 

Monday, 30 March 2015

தமிழை நேசிப்போம்! தமிழில் பேசுவோம்!


தமிழ் மொழி  மாதம்  என்றால் சிங்கையில் கொண்டாட்டம் !




(இந்த பாட்டின் முடிவில் உமறு புலவர் தமிழ் பள்ளியின் சார்பாக நானும் தோன்றுவேன்:)

உலகில் வேறு எங்கும் காண முடியாத கேட்க முடியாத ஆச்சரியமான தமிழ் மொழி மாத கொண்டாட்டம்  என்றால் அது சிங்கையே! மாணவர்களின் தமிழ் மொழி ஆர்வத்தை மேம்படுத்த சிங்கப்பூர்  தமிழ் சங்கங்கள் ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழ் மொழி மாதமாக  கொண்டடுகிறது. 







உமறு புலவர், தமிழ் முரசு மற்றும் வளர் தமிழ் போன்ற தமிழ் கற்பிக்கும் இயக்கங்கள் பல போட்டிகளை நடத்தி மாணவர்களின் தமிழ் புலமையை மேம்படுத்துகிறது. 



















பேச்சுத் திறமையை ஊக்கப்படுத்தும் விதமாக சொற்களம், சொற்சிலம்பம், சொற்போர் , தேசிய அளவிலான கதை சொல்லும் போட்டி, திருக்குறள் விழா என்று மாணவர்களின் தமிழ் மொழி திறமைய சிங்கப்பூரில்  தமிழ் மொழி மாதம் வெளிச்சம் காட்டுகிறது. 






சிங்கை நூலகங்களில் சிறுவர்களுக்கான கதை சொல்லும் நேரம் ஒவ்வொரு மாதமும் நடைபெறும். தமிழில் கதை சொல்லும் நேரத்தில் பிரபலமாக  கதை சொல்பவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து சிறுவர்களின் மேலும் உற்சாகப்படுத்துவர். 









சிங்கையில் உள்ள நூலகங்களில் தமிழ் தொகுப்பில் பன்னிரெண்டாயிரதிற்கும் மேற்பட்ட புத்தகங்களும்  40 வகையான சனிஜிகைகளும் இடம் பெற்றிருக்கின்றன. இத்தொகுப்பில் உள்ள அனைத்து நூல்களும் இலங்கை, மலேசியா, இந்திய ஆகிய நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்டன. சமூகம், கலை, சமையல், மொழி, இலக்கியம், கலாச்சாரம், அறிவியல், நீதி, சட்டம், வரலாறு  என அணைத்து தொகுப்புகளிலிருந்தும் அரிய புத்தகங்கள் இருக்கின்றன. பாலர் பள்ளி, தொடக்கப்பள்ளி, உயர்நிலை மாணவர்கள், தொடக்கக் கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், இல்லகியவாதிகள், பொதுமக்கள் என எல்லா பிரிவினருக்கும் அவரவர் வயதிற்கு ஏற்றார் போல புத்தகங்கள் சேகரித்து வைக்கப்பட்டுளன. 

சமயத் தொகுப்புகளில் சைவ, வைணவத திருத்தலங்களின் குறிப்புகள் அடங்கிய தொகுப்புகள் உள்ளன. இந்துக் கலாச்சாரம், குலதெய்வங்கள், வழிபடும் முறைகள், ஐம்பெரும் காபியன்கலான சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், குண்டலகேசி, மணிமேகலை, வளையாபதி, இந்திய இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம், சமைய புதகன்கலான பெரியபுராணம், திருவிளையாடர்புராணம், கிறிஸ்தவ, இஸ்லாமிய புத்தகங்களும் இடம்பெற்றிருக்கின்றன. 

அக்காலத்திலிருந்து இக்காலம் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட சங்க இலக்கிய புத்தகங்கள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு , பதினென்கீழ்கணக்கு, பாரதியார், பாரதிதாசன் போன்ற கவிங்ஞயர்களின் தொகுப்புகள், ஆய்வுக்கட்டுரைகள் என்று சகல விதமான  புத்தகங்கள் சிங்கை நூலகங்களில் இடம்பெற்றிருக்கின்றன. 

வாசிப்போம்! வாசிப்பை நேசிப்போம்!


Wednesday, 25 March 2015

தமிழுக்கான அங்கீகாரம்









சிங்கப்பூர் அரசின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரத்துவ மொழிகளுள் தமிழும் ஓன்று . ஆங்கிலம் , சீனம், மலாய் என்பன பிற அதிகாரத்துவ மொழிகள். ஆங்கிலம் நிர்வாக மொழியாக இருக்கின்றது. தேச முன்னேற்றத்திற்காக எல்லா இனத்தினரும் ஒருவரோடு ஒருவர் இணைந்து, கூடிக்கலந்து, ஒருவர் மற்றொருவரை மதித்துப் பண்புடன் வாழுகின்றனர்.


சிங்கப்பூர் சட்டசபையில் தமிழ் மொழியைப் பயன்படுத்த அனுமதி தரப்பட்டிருக்கின்றது. எல்லா அரசு அறிக்கைகள், மருத்துவமனைகள், சாலைகள், பேருந்து நிலையம், மற்றும் வங்கிகளில் தமிழ் பயன்படுத்தப்படுகின்றது. 

வங்கிகளில் ஆண்டு அறிக்கைகளில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுகிறது. தொடர் வண்டிகளில் எச்சரிக்கைகளும், அறிக்கைகளும் தமிழில் அறிவிக்கப்படுகின்றன. அரசு மருத்துவமனை, வங்கி, அங்காடி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் தமிழர்கள் பணிபுரிகின்றனர். இதுவே தமிழுக்கு சிங்கையில் கிடைத்திருக்கும் வரவேற்பாகும்.
.

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!


















சிங்கை கல்வி வளாகத்தில் திருவள்ளுவர்

உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமையாக நிற்கும்படி செய்ட சிறப்புக்குரியவர் திருவள்ளுவர்.  சிறந்த சிந்தனையாளர்களின் பட்டியலில் உயர்ந்த இடத்தில இருப்பவர் வள்ளுவர். சிங்கை மாநகரத்தில் MDIS என்ற புகழ் பெற்ற கல்வி வளாகத்தில் நுழைவாயிலில் உள்ள சிற்பங்களில் திருவள்ளுவர் இடம்பெற்றிருக்கிறார்.
வெவ்வேறு நாட்டிலிருந்து வந்து மாணவர்கள் பயிலும் இந்த கல்வி நிலையித்தில் வள்ளுவர் இ டம் பெற்றிருப்பது, மாணவர்களுக்கு நன்னெறிகளை கற்றுக் கொடுப்பதொடு, நன்மை தீமைகளை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற காரணம் தான்.



MDIS வளாகத்தில் உள்ள சிற்பங்களுள் வள்ளுவர் இடம்பெற காரணமாக இருந்தவர் MDIS நிறுவனத்தின் பொதுச் செயலாளர் திரு  தேவேந்திரன் ஆவார். இவருடைய பூர்வீகம் இலங்கை ஆகும். இக்கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களை மனதளவில் ஊக்கப்படுத்தவும், அவர்கள் வாழ்க்கைக்கு தேவையான ஒழுக்கங்களை பெறுவதற்கும் இந்த தலைசிறந்த மனிதர்களின் உருவச் சிலைகள் உதவும் என்பதற்காக தேவேந்திரன் இந்த சிலைகளை கல்வி நிலையத்தின் வாசலில் நிறுவி உள்ளார். 






வாழ்க தமிழ்! 

Wednesday, 4 March 2015

சிங்கையில் தமிழ் வளர்க்கும் ஊடகங்கள்






தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்களால் 1936 ஆம் ஆண்டு தமிழ் முரசுதொடங்கபெற்றது. தமிழ் மொழியின்  வளர்ச்சிக்கு தமிழ் முரசு  ஆற்றியுள்ள பணி மிகவும் போற்றத்தக்கது. சிங்கையிலிருந்து வெளியாகும் பல பத்திரிகைகளுள் இதுவும்  ஒன்று. 'நாட்டின் மிகப் பழமையான பத்திரிக்கைகளுள் ஒன்றான தமிழ் முரசு உள்நாடு  மற்றும் வெளிநாட்டு செய்திகள், இந்திய சமூக செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகள், விளையாட்டுச்  செய்திகள், ஆன்மிகம், சமையல் மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் என்று  மக்களுக்கு தினம்தோறும் சுவையான விருந்தை வழங்குகிறது. 

தமிழ் மாணவர்களின் எழுத்தாற்றலை மேம்படுத்த வாரந்தோறும் மாணவர் முரசு மற்றும் இளையர் முரசு என்னும் சிறப்பு  பகுதிகளை  தமிழ் முரசு வெளியிடுகிறது. 





ஒலி  ஒளி வழி தமிழ் வளர்ச்சி  

 

கொஞ்சும் தமிழில் 24 மணிநேரமும் தமிழ் நிகழ்ச்சிகளை ஒலி பரப்பும் 96.8 எனும் பண்பலை வரிசை சிங்கையின் தமிழ் வானொலி ஆகும். 


ஒலி 96.8 காலவரிசை 

1936 - ஜூன் 1 இல் பிரித்தானிய மலாயா ஒலிபரப்பு நிறுவனத்தின் ஒரு பகுதியாக 4 மணி நேர இந்திய ஒலிபரப்பாகத் தொடங்கியது.

1959 - இந்நிறுவனத்தின் பெயர் ரேடியோ சிங்கப்பூர் என மாற்றப்பட்டது.

1965 - ஆகஸ்ட் மாதம் இந்நிலையம் ரேடியோ சிங்கப்பூர் நிலையம், ரேடியோ டெலிவிஷன் சிங்கப்பூர் (RTS), ரேடியோ சிங்கப்பூர் எனப் பெயர் மாற்றம் கண்டது. இந்திய மொழி ஒலிபரப்பு இந்தியச் சேவை என்றழைக்கப்பட்டது.

1980 - RTS சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகம (SBC) என்ற ஆணை பெற்ற கழகம் ஆனது.

1982 - இந்திய வானொலிச் சேவை ஒலிவழி 4 எனப் பெயர் மாற்றம் கண்டது
.
1992 - ஒலிவழி 4, ஒலிக்களஞ்சியம் என்ற பெயரைப் பெற்றது.

1994 - சிங்கப்பூர் ஒலிபரப்புக்கழகம் தனியார் மயமாகி சிங்கப்பூர் வானொலிக் கழகம் என்ற பெயரைப் பெற்றது.

1997 - ஏப்ரல் 14 இல் ஒலிக்களஞ்சியம் என்ற பெயர் சுருங்கி ஒலி 96.8 ஆனது.

1998 - மே மாதத்தில் ஒலியின் முதல் நூல் வெளியீடாக, மீனாட்சி சபாபதி எழுதிய அறிவோமா நாம் புத்தகம் வெளியிடப்பட்டது. நம்மவர்களின் பண்பாட்டின் பின்னணியில் உள்ள அறிவியல் அடிப்படைய விளக்கி ஈராண்டு தொடர்ந்து ஒலியேறிய அறிவோமா நாம் எனும் நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட விவரங்களை இந்நூல் கொண்டிருந்தது.

1998 - ஜூலை 4 இல் ஒலிக்கு முதல் அறப்பணி விருது, நியூயார்க்கில் வழங்கப்பட்டது. நாராயண மிஷன் முதியோர் இல்லத்திற்கு $250,000 வெள்ளி திரட்டியதற்காக அந்த அங்கீகாரம்.
2000 - அக்டோபர் 16இல் ஒலி 96.8-இன் புதுப்பிக்கப்பட்ட இணையத் தளம் செயல்படத் தொடங்கியது. 60 -க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து மக்கள் இணையம் வழியாகக் கேட்கத் தொடங்கினர்.
2001 - ஜூன் 21இல் சமூக சேவைக்குரிய பெருமைமிகு வோர்ல்ட்மெடல் விருது நியூயார்க் விழாவில் வழங்கப்பட்டது. அது குஜராத் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்காக மூன்றே வாரங்களில் $2.6 மில்லியன் வெள்ளியைத் திரட்டிக் கொடுத்த ஒலியின் சாதனை முயற்சிக்காக வழங்கப்பட்டது.

2001 - ஆகஸ்ட் 10 இலிருந்து 24 மணி நேரமும் இடைவிடாத ஒலிபரப்பு வழங்கத் தொடங்கியது.

2002 - பெப்ரவரி 22இல் ஒலி 96.8 -க்கு குஜராத் நிதி திரட்டு முயற்சிக்காக பிரிசம் விருது (மானிடச் சேவையில் பொதுச் சேவை விருது) சிங்கப்பூர் பொதுத் தொடர்புக் கழகத்தால் வழங்கப்பட்டது.

2002 - மே 26இல் வழக்கமாகத் தொலைக்காட்சிக் கலைஞர்களை கௌரவிக்கும் பிரதான விழாவில் முதன் முறையாகப் பங்கேற்றது ஒலி. மிகப் பிரபலமான ஒலி படைப்பாளர் விருதை ரஃபி வென்றார். மிகப் பிரபலமான நிகழ்ச்சியாக வரலாற்றில் இன்று தேர்வு பெற்றது.

2002 - ஆகஸ்ட் 10-11 ஒலியின் 24 மணி நேரச் சேவையின் முதலாண்டு நிறைவை முன்னிட்டு 24 மணி நேர இடைவிடா மேடை/கலை நிகழ்ச்சியை செந்தோசாவில் நடத்தியது. சுமார் 7000 பேர் கலந்து கொண்டனர். புதுப்பிக்கப்பட்ட இணையப் பக்கமும் அரங்கேறியது.

2002 - நவம்பர் 9இல் ஒலியின் முதல் தீபாவளி அறநிதி விருந்து நிகழ்ச்சி. வானொலி மூலம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் வழி 2 வாரங்களில் $60, 000வெள்ளி திரட்டப்பட்டது. சிண்டாவின் புரொஜெக்ட் கிவ் திட்டத்திற்கு இத்தொகை வழங்கப்பட்டது. 2003 நவம்பர் 1இல் நடந்த இரண்டாவது விருந்து நிகழ்ச்சியின் போது $32,000 வெள்ளி திரட்டப்பட்டது.

2002 - டிசம்பர் 9இல் ஒலியும் CLAV நிறுவனமும் இணைந்து 180, சிராங்கூன் சாலையில் குறுவட்டு விற்பனை மையத்தைத் தொடங்கின. இசைப் புயல் ஏ. ஆர். ரகுமான் திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

2003 - மார்ச் 30இல் வானொலியின் வெற்றிப் படைப்பான 'வரலாற்றில் இன்று' நூலாக வெளியிடப்பட்டது.

2003 - ஆகஸ்ட் 9-10இல் ஒலியின் 24 மணி நேர சேவை தொடங்கி ஈராண்டு பூர்த்தியானதை முன்னிட்டு மாபெரும் தீவு தழுவிய 24 மணி நேர தமிழ் வாசிப்பு நிகழ்ச்சி, மிக வெற்றிகரமாக நடைபெற்றது. ஒலியும் தேசிய நூலக வாரியமும் இணைந்து மேற்கொண்ட இம்முயற்சியில் பல்வேறு தமிழ் அமைப்புகளும் பங்கேற்றன. 2003 ஆகஸ்ட் 10 -ம் தேதி, ஒலி முதன் முறையாக இரத்த நன்கொடை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்தது. 
இந்நிகழ்ச்சி, மீடியாகார்ப் வானொலிகளின் ஆறு மாத நடவடிக்கைகளில் மிகச் சிறந்ததெனத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

2003 - ஆகஸ்ட் 10 உலகத் தமிழ் வரலாற்றில் புது முயற்சியாக ஒலியுடன் தமிழில் எனும் குறுவட்டை வெளியிட்டது ஒலி. இவ்வட்டின் வழி, நேயர்கள் ஒலி படைப்பாளர்களுக்கு நேரடியாக தமிழில் மின்னஞ்சல் (மின் கடிதம்) அனுப்ப முடியும். 10,000 வட்டுகள் நேயர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

2004 - மார்ச் 5இல் ஒலி 96.8 இரண்டாம் முறையாக பிரிசம் விருது பெற்றது. இம்முறை தேசிய நூலக வாரியத்துடன் இணைந்து நாடு முழுவதும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியை 24 மணி நேரம் நடத்தியமைக்காக அந்த விருது கிடைத்தது.

2004 - டிசம்பர் 30 – ஜனவரி 2 2005 இல் ஒலியும் வசந்தம் சென்ட்ரலும் இணைந்து சுனாமி பேரிடருக்காக கேம்பல் லேனில் நிதி திரட்டு நிகழ்ச்சியை நடத்தின. லிஷா ( Lisha) மற்றும் வேறு சில இந்திய அமைப்புக்களின் ஆதரவோடு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்திற்காக நான்கே நாட்களில் 426 000 வெள்ளி திரட்டப்பட்டது. மேலும் ஒலியின் வரலாற்றில் முதன்முறையாக ஒரு நிமிடத்திற்கு எங்கள் ஒலி அலை ஓய்ந்தது. சுனாமியில் மாண்டோரின் நினைவாக 2004 டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவில் ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

2005 - ஜனவரி 15 தைப்பொங்கலை முன்னிட்டு, முரசு அஞ்சல் முத்து நெடுமாறனின் தொழில்நுட்ப உதவியுடன், உலகின் முதல் முயற்சியாக தமிழ் குறுஞ்செய்திச் சேவையை அறிமுகம் செய்தது ஒலி.




வசந்தம் (சிங்கப்பூர் தொலைக்காட்சி)

சிங்கையின்  ஒளி வழி அலைவரிசையான வசந்தம்  தமிழிலும் பிற இந்திய மொழிகளிலும் நிகழ்சிகளை வழங்கும் தொலைகாட்சிச் சேவை ஆகும்.

நாள்தோறும் 9 மணிநேரம் ஒளிபரப்பப்படும்  வசந்தம் சென்ட்ரலில் விறுவிறுப்பான தமிழ் மற்றும் பிற இந்திய மொழி  நாடகங்கள்,  பட்டிமன்றங்களின் தொகுப்பு, சமையல் நிகழ்ச்சிகள்,  கல்வி நிகழ்ச்சிகள் , சிறுவர் நிகழ்ச்சிகள், குடும்பமாக கலந்து கொள்ளும் போட்டிகள், படங்கள், மருத்துவக்  குறிப்புகள், சுற்றுலா தளங்கள் , பாரம்பரிய பழக்க வழக்கங்கள்,  ஒலிபரப்பபடுகின்றன.  இதை தவிர விழா காலங்களில் சிறப்புத்  தமிழ் நிகழ்ச்சிகளை வசந்தம் தொலைகாட்சி மக்களுக்கு வழங்குகிறது.



Friday, 30 January 2015

நீண்ட இடைவெளிக்கு பிறகு.....






தொடர்ந்து சில நாட்களாக  சிமிழ் மூடி இருந்தமைக்கு மன்னிக்கவும். 

நான் உயர்நிலை இரண்டம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன். பள்ளிப்  பாடம், திட்டப்பணி, போட்டி, தேர்வு, இணைபாட நடிவடிக்கைகள் என தினமும் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை கடிகாரத்தை சுற்றும் முள்ளை போல சுற்றிக்கொண்டே இருக்கிறேன். மிக முக்கியமாக, தமிழ் தட்டச்சு செய்வதில் ஆமையை விட வேகமாக நான் இல்லை. சரியான தமிழ் வார்த்தைகளை இணையத்தின் வழி தேடி, சில சமயங்களில்  அகராதியை புரட்டி தேடி கண்டு பிடிப்பதற்குள் உலகத்தையே ஒரு சுற்று சுற்றி விட்டு வண்டு விடலாம் போல இருக்கிறது.  



 மீண்டும் இந்த வலைப்பூவை எப்படியாவது முடிந்தவரை செய்து முடித்துவிட வேண்டும் என்று எண்ணுகிறேன். பார்போம்..



பதிவுகள் தொடரும்.... 

Saturday, 24 January 2015

சிங்கையில் தமிழ்க் கல்வி காலக்கெடு



பதிவு 2. தமிழ் மொழியின் பரிணாம வளர்ச்சி 


தமிழ்வழி கல்வி சிங்கப்பூர் நிறுவப்பட்ட காலத்திலேயே தொடங்கப்பட்டது. அனால் அது முறையாக இயங்கத் தொடங்கியது 2ஆம் உலகப் போருக்குப் பின்னர் தான் . இரண்டாம் உலகப்போருக்கு முன்பே தனியார் பள்ளிகளும் மிஷன் தமிழ்ப் பள்ளிகளுமாக மொத்தம் 18 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. சுமார் 1000 மாணவர்கள் பயின்று வந்த மிஷன் மற்றும் தமிழ் பள்ளிகளில் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர ஆரம்பித்தது. இரண்டாம் மொழிக்கான அவசியத்தை இந்தக்காலக் கட்டத்தில்தான் அதாவது 1945க்குப் பின்னர்தான் எல்லோரும் உணர்ந்தனர்.

இரண்டாம் மொழி கற்பதின் அவசியம் இரண்டாம் உலகப் போர் முடிவுற்றதும் உருவாக்கப்பட்டது. புதிய கல்விக் திட்டத்தின் முக்கியக் கூறுகளின்படி ஆங்கிலப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குத் அவர்களுடைய தாய் மொழியை இரண்டாம் மொழியாகப் பாடமாக பயில ஊக்கம் அளிக்கப்பட்டது.


1959ஆம் ஆண்டில் இரண்டாம் மொழி கட்டாயப்பாடமாக்கப்பட்டவுடன் தமிழை மொழி பாடத்தை இரண்டாம் மொழியாகப் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.. தமிழ் அல்லாது பிற தென்னிந்திய மொழிகளைத் தங்கள் தாய் மொழியாகக் கொண்ட மாணவர்களும் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்க ஆர்வம் காட்டினர்.


தமிழ் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் பல ஆங்கிலப் பள்ளிகளில் மேலும் பல தமிழாசிரியர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.


தமிழ் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையும், தமிழ் மொழி கல்வியின் தரமும் வளர்ச்சியடைய ஆங்கில உயர்நிலைப் பள்ளிகளிலும் தமிழ்க்கல்வியைத் தொடர்ந்து மாணவர்கள் கற்றனர்.


தமிழ் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயர, 1957ல் மூன்று தமிழ் நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டு சுமார் 150 மாணவர்கள் தமிழ் கற்றனர். அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் பல தமிழ் நிலையங்கள் தொடங்கப்பட்டன. இவ்வாறாக சிங்கப்பூரில் தமிழ் மொழியின் பரிணாம வளர்ச்சி வலுபெற்றது.






பதிவுகள் தொடரும்...