தமிழ் மொழி மாதம் என்றால் சிங்கையில் கொண்டாட்டம் !
(இந்த பாட்டின் முடிவில் உமறு புலவர் தமிழ் பள்ளியின் சார்பாக நானும் தோன்றுவேன்:)
உலகில் வேறு எங்கும் காண முடியாத கேட்க முடியாத ஆச்சரியமான தமிழ் மொழி மாத கொண்டாட்டம் என்றால் அது சிங்கையே! மாணவர்களின் தமிழ் மொழி ஆர்வத்தை மேம்படுத்த சிங்கப்பூர் தமிழ் சங்கங்கள் ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழ் மொழி மாதமாக கொண்டடுகிறது.
உமறு புலவர், தமிழ் முரசு மற்றும் வளர் தமிழ் போன்ற தமிழ் கற்பிக்கும் இயக்கங்கள் பல போட்டிகளை நடத்தி மாணவர்களின் தமிழ் புலமையை மேம்படுத்துகிறது.
பேச்சுத் திறமையை ஊக்கப்படுத்தும் விதமாக சொற்களம், சொற்சிலம்பம், சொற்போர் , தேசிய அளவிலான கதை சொல்லும் போட்டி, திருக்குறள் விழா என்று மாணவர்களின் தமிழ் மொழி திறமைய சிங்கப்பூரில் தமிழ் மொழி மாதம் வெளிச்சம் காட்டுகிறது.
சிங்கை நூலகங்களில் சிறுவர்களுக்கான கதை சொல்லும் நேரம் ஒவ்வொரு மாதமும் நடைபெறும். தமிழில் கதை சொல்லும் நேரத்தில் பிரபலமாக கதை சொல்பவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து சிறுவர்களின் மேலும் உற்சாகப்படுத்துவர்.

சிங்கையில் உள்ள நூலகங்களில் தமிழ் தொகுப்பில் பன்னிரெண்டாயிரதிற்கும் மேற்பட்ட புத்தகங்களும் 40 வகையான சனிஜிகைகளும் இடம் பெற்றிருக்கின்றன. இத்தொகுப்பில் உள்ள அனைத்து நூல்களும் இலங்கை, மலேசியா, இந்திய ஆகிய நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்டன. சமூகம், கலை, சமையல், மொழி, இலக்கியம், கலாச்சாரம், அறிவியல், நீதி, சட்டம், வரலாறு என அணைத்து தொகுப்புகளிலிருந்தும் அரிய புத்தகங்கள் இருக்கின்றன. பாலர் பள்ளி, தொடக்கப்பள்ளி, உயர்நிலை மாணவர்கள், தொடக்கக் கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், இல்லகியவாதிகள், பொதுமக்கள் என எல்லா பிரிவினருக்கும் அவரவர் வயதிற்கு ஏற்றார் போல புத்தகங்கள் சேகரித்து வைக்கப்பட்டுளன.
சமயத் தொகுப்புகளில் சைவ, வைணவத திருத்தலங்களின் குறிப்புகள் அடங்கிய தொகுப்புகள் உள்ளன. இந்துக் கலாச்சாரம், குலதெய்வங்கள், வழிபடும் முறைகள், ஐம்பெரும் காபியன்கலான சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், குண்டலகேசி, மணிமேகலை, வளையாபதி, இந்திய இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம், சமைய புதகன்கலான பெரியபுராணம், திருவிளையாடர்புராணம், கிறிஸ்தவ, இஸ்லாமிய புத்தகங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
அக்காலத்திலிருந்து இக்காலம் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட சங்க இலக்கிய புத்தகங்கள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு , பதினென்கீழ்கணக்கு, பாரதியார், பாரதிதாசன் போன்ற கவிங்ஞயர்களின் தொகுப்புகள், ஆய்வுக்கட்டுரைகள் என்று சகல விதமான புத்தகங்கள் சிங்கை நூலகங்களில் இடம்பெற்றிருக்கின்றன.
வாசிப்போம்! வாசிப்பை நேசிப்போம்!
No comments:
Post a Comment