Wednesday, 21 January 2015

சிங்கப்பூர் வரலாறு




 பதிவு 1 - வரலாறு அறிந்த உண்மை 


சிவப்புப் புள்ளி சிங்கப்பூர் 


உலக வரைபடத்தில் ஒரு சிறிய சிவப்பு புள்ளி சிங்கப்பூர். மீனவ கிராமமாக இருந்த சிங்கப்பூர்  இன்று வளர்ந்த நாடுகளின் வரிசையில் உச்ச வரிசையில் இடம் பெற்றிருப்பது மிகவும் பெருமைக்குரிய  விஷயம். 704 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட சிங்கப்பூரின் மக்கள் தொகை சுமார் ஐந்தரை  மில்லியன் ஆகும். சீனர்கள் பெரும் பகுதியாகவும், அடுத்த இடத்தில் மலாய்காரர்களும், சிறுபான்மையாக இந்தியர்களும் இங்கு வசிக்கின்றனர். வங்காளிகள், குஜராத்திகள் மற்றும் தமிழர்கள் குடியேறிய முன்னைய சிங்கப்பூரில் தற்போது, பஞ்சாபியர்கள், மலையாளிகள், மராத்தியர்கள் என்று இந்தியர்களின் மக்கள் தொகை பெருகிக்கொண்டே போகிறது. 

 பெயர்காரணம் 




சிங்கபூர்க்கும் தமிழுக்கும் நீண்டதொரு வரலாறு சார்ந்த தொடர்பு உண்டு. சிங்கைத் தீவில் முதன்  முதலில் குடியேறிய பெருமைக்குரிய வம்சம் சோழ வம்சைதையே சாரும்.  சிங்கப்பூர் என்ற பெயர் சமஸ்க்ருதத்திலிருந்து பிறந்ததாகும். இதற்குச் சான்று சிங்கப்பூரில் கண்டெடுக்கப்பட்ட பழம்பெரும் கல்வெட்டுகளில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பதை கூறலாம். சிங்கப்பூர் என்ற பெயர் சிங்கப்பூரா என்ற மலாய் சொல்லிலிருந்து மருவியதாகவும் கூறப்படுகிறது. மலாய் சொற்களான சிங்கா (சிங்கம்) மற்றும் பூரா (ஊர் ) சேர்ந்து சிங்கப்பூரா என்று அழைக்கப்படுகிறது.


தொல்லியல் ஆராய்ச்சியில் கிடைத்த தமிழ் கல்வெட்டு 



பதிவுகள் தொடரும்... 


No comments:

Post a Comment