தொடர்ந்து சில நாட்களாக சிமிழ் மூடி இருந்தமைக்கு மன்னிக்கவும்.
நான் உயர்நிலை இரண்டம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன். பள்ளிப் பாடம், திட்டப்பணி, போட்டி, தேர்வு, இணைபாட நடிவடிக்கைகள் என தினமும் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை கடிகாரத்தை சுற்றும் முள்ளை போல சுற்றிக்கொண்டே இருக்கிறேன். மிக முக்கியமாக, தமிழ் தட்டச்சு செய்வதில் ஆமையை விட வேகமாக நான் இல்லை. சரியான தமிழ் வார்த்தைகளை இணையத்தின் வழி தேடி, சில சமயங்களில் அகராதியை புரட்டி தேடி கண்டு பிடிப்பதற்குள் உலகத்தையே ஒரு சுற்று சுற்றி விட்டு வண்டு விடலாம் போல இருக்கிறது.
மீண்டும் இந்த வலைப்பூவை எப்படியாவது முடிந்தவரை செய்து முடித்துவிட வேண்டும் என்று எண்ணுகிறேன். பார்போம்..
பதிவுகள் தொடரும்....